கத்திரிக்காய் வற்றல்.:
தேவையான பொருட்கள்.:
கத்திரிக்காய் – கால் கிலோ,
புளித் தண்ணீர் – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை.:
கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் புளித் தண்ணீர் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும்.
வெந்ததும் நீரை வடித்து, திரும்பவும் 2 நாட்கள் வெயிலில் காயவைத்து உபயோகப்படுத்தவும்.
இதை வதக்கி பயன்படுத்தி குழம்பு செய்தால்… ருசியாக இருப்பதுடன், வாசனை ஊரைக் கூட்டும்.